districts

img

நெடுஞ்சாலைதுறையின் அலட்சியம் வந்தவாசியில் உண்ணாநிலை போராட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 18-

      திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த மங்கலம் மாமண்டூர் கீழ்கொடுங்காலூர் கூட்டு சாலையில் இருந்து உத்தரமேரூர் செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியில் நிலவும், அலட்சியப்போக்கைத் கண்டித்து மூன்றாவது கட்டமாக, ஒரு நாள் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.  

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வந்தவாசி நெடுஞ்சாலை துறை அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா. செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர்  உரையாற்றினர்.

    மங்கலம் மாமண்டூர் கூட்டு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பார பட்சம் காட்டக்கூடாது,  கூட்டுச் சாலை யின் துவக்கத்தில் கிழக்கு புறம் கோணல் மானலாக கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால்வாயை உடனே அகற்றி, சாலையின் ஓரமாக கால்வாய் அமைக்க வேண்டும்,  கூட்டுச் சாலையின்  நடுவில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடி கால்வாயை, மேற்கே 10 அடி தூரம் தள்ளி ஓரமாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.