districts

img

நீட் தேர்வு: உண்டு உறைவிட பள்ளியில் படித்த விழுப்புரம் மாணவி முதலிடம்

விழுப்புரம், செப். 9- விழுப்புரம் தேவநாத சுவாமி நகர், ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த வர் பிருந்தா. இவர் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்பு அங்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து முடித்தார்.  12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் படத்தில் 99 மதிப்பெண்கள், ஆங்கிலம் 94 மதிப்பெண்கள், கணிதம் இயற்பியல் வேதியல் மற்றும் உயிரியியல் ஆகிய நான்கு பாடத்திலும் தலா 100 மதிப்பெண்கள் என 593 மதிப்பெண்கள் பெற்றார்.  இந்த ஆண்டிற்கான அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியி யல் படிப்பிற்கான தர வரிசை பட்டியலில், அரசு பள்ளி அளவில் பிருந்தா கட்ஆப் 200க்கு 200 எடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  நீட் தேர்வில் 467 மார்க் எடுத்து இவர் அரசுப் பள்ளி யில் படித்து 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவிக்கு முதன்மை கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

;