திருவொற்றியூர் ஐஓசி கேட் அருகே குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் ஆர்.கே. நகர் சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு உறுப்பினர் அருமைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் மண்டலக் குழு தலைவர் கணேசன் ஒரு வாரத்தில் சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதில் பகுதிக் குழு உறுப்பினர் கே .வெங்கட்டய்யா, கிளைச் செயலாளர் மணிவண்ணன், கிராம தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.