திருவள்ளூர், மே 7- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் பனை மரத்தை பாதுகாத்து பேணிக்காக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பனை திருவிழா ஞாயிறன்று (மே-7), நடைபெற்றது. இயற்கை அரண் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி யில் பனை மரத்தின் சிறப்புகள் குறித்தும் பனை மரத்தின் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் பனை மரத்தால் பயன் பெற்ற பெரியோர்கள் விளக்கம் அளித்தனர். பனை ஓலைகள் மற்றும் பனைமரத்தலான பயன் தரும் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இயற்கை அரண் பனை குழு தலைவர் ஏகாட்சரம் ஏற்பாட்டில் நடைபெற்றது.