மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் திருவள்ளூர் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் நக்கீரன் துணைவியார் கனகசௌந்தரி உருவப்பட திறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் அவரது உருவப்படத்தை திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், குருமூர்த்தி கட்சியின் தலைவர்கள் பி.துளசி நாராயணன், ஏ.பாக்கியம், டி.கே.சண்முகம், பி.நடேசன், ஜி.வி.எல்லையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.