திருவள்ளூர், ஆக. 2- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே ஆத்தூர் கிராமத்தில் விசிக மாவட்ட துணைச் செயலாளர் பாரதி சரவணன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டி ருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் செங்கலால் அடித்து உடைத்துள்ளனர். இது குறித்து உடனே காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சோழவரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.