districts

வீட்டின் அருகே மது அருந்தியதை  தட்டிக் கேட்டவர் கொலை

சென்னை, ஏப். 11- திருவல்லிக்கேணி வெங்கடாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (50). இவர் கடந்த சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே படுத்து தூங்கினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் அங்கு அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மெரினா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பத்தூர்  மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு சாலை பகுதியைச் சேர்ந்த சமீல் அகமது (32), பெரும்பாக்கம் 13ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்த கொ.சுஜி (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் திங்கட்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 9ஆம் தேதி சமீல் அகமது பச்சையப்பன் வீட்டின் அருகே மது அருந்தினராம், அப்போது அங்கு வந்த பச்சையப்பன் சமீல்  அகமதுவை கண்டித்தாராம், இதில் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் பச்சையப்பன் படுத்து தூங்குவதை பார்த்த சமீல் அகமது, தனது கூட்டாளி சுஜியுடன் வந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.