districts

காஞ்சியில் பல அடுக்கு வாகன நிறுத்தம்: சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு அறிவிப்பு

சென்னை, ஏப்.11- சென்னை தி.நகரில் கட்டப்பட்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் போல் இல்லாமல், இனி கட்டப் படும் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் இரும்பு பீம் கொண்டு எளிய செலவில் கட்டப்படும் என்று அமைச் சர் கே.என்.நேரு தெரி வித்தார். சட்டப்பேரவையில்  திங்களன்று (ஏப்.11)  கேள்வி  நேரத்தின்போது ஐட்ரீம்ஸ் மூர்த்தி (ராயபுரம்), எழிலரசன் (காஞ்சிபுரம்), பிச்சாண்டி (கீழ்பென்னாத் தூர்)  எழுப்பிய கேள்விக ளுக்கு பதிலளித்த நகராட்சி  நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ராயபுரம் எம்.சி.சாலை குறுகலாக உள்ளதால், அதற்கு அருகே உள்ள ராபின்சன் பூங்கா அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கேற்ப, தமிழ்நாடு முழுவதுமே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளதாகவும், தேவைப் படும் இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும் திருவண்ணா மலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நகராட்சித்துறையின் இடம் ஏதும் இருப்பின் அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்திலும் இடம் கிடைப்பதைப் பொறுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக் கப்படும் என்றும், சென்னை யின் தி.நகரில் அமைக்கப் பட்டது போல் இல்லாமல், இனி இரும்பு பீம் கொண்டு குறைந்த செலவில் பன்னடுக்கு வாகன நிறுத் தங்கள் கட்டப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

;