சென்னை, நவ. 30 - குரோம்பேட்டையில் போக்குவரத்து சிக்னலை திறந்துவிடக் கோரி புதனன்று (நவ.29) கவுன் சிலர் தலைமையில் கையெ ழுத்து இயக்கம் நடை பெற்றது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தடையின்றி வாகனங்கள் சென்று வரவும் போக்கு வரத்து காவல்துறை சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இதன்படி பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் குரோம்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்ப தடை விதித்து தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நேராக சென்று எம்ஐடி பாலத்தின் மீது ஏறி சுற்றி வரவேண்டும். குரோம்பேட்டை சிக்னலில் தடுப்பு வைக்கப் பட்டுள்ளதால், நியூ காலனி யில் இருந்து வரும் வாகனங் கள் நாகல்கேணி பாலத்தின் மீது சென்று (2 கி.மீ.) சுற்றி வந்து தாம்பரம் செல்ல வேண்டும். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகினர். இந்த போக்குவரத்து மாற்றத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் சாலையை கடப்ப தற்கான கால அளவை அதிகப்படுத்த கோரியும் நவ.22 அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் 28வது வார்டு கிளை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதனையடுத்து, சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாக ரன், 28வது வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி உள்ளிட்டோரிடம் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு தினங்களில் சிக்னல் திறக்கப்படும் என்றார். அதன்படி, சிக்னல் திறக்கப் படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் 28வது வார்டு கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் என ஏராளமானோர் கையெழுத்திட்டனர். இந்த இயக்கத்திற்கு தாம்பரம் மாநகராட்சியின் 28 வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் எம்.சி பிரபா கரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்தாமு, நிர்வாகிகள் அரிகிரு ஷ்ணன், மாயவன், பழனி, ஏழுமலை, அறிவுச்செல் வன் வாலிபர் சங்க நிர்வாகி மனோ உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.