districts

மாதாந்திர மின் கட்டண நடைமுறையை அமல்படுத்த வணிகர் பேரமைப்பு கோரிக்கை

சென்னை, ஜூன் 18- மின் கட்டணத்தை மாதமாதம் கணக்கெடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தமிழ்நாடு அரசின் தலைமைச் செயாலாளர் சிவ்தாஸ் மீனாவை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், வணிக உரிமம் புதுப்பித்த லுக்கு சொத்துவரி ரசீது கட்டாயம் என்பதை நீக்க வேண்டும். வணிக உரி மங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுத் பித்தலுக்கான முதல்வரின் அறிக்கையை உடனே அரசாணையாக வெளியிட வேண்டும்.

வணிக உரிமம் என்பது வணிக த்திற்கான அடையாளம் மட்டுமே. வணிக உரிமங்கள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒற்றைச் சாளர முறை யில், ஆயுள் உரிமமாக மாற்றி, வணி கர்கள் எளிதில் உரிமம் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்ட நடைமுறைகளை பொது மக்களின் சேவகர்களாகிய வணிகர்க ளுக்கும் நடைமுறைப்படுத்த வணிகர் பாது காப்புச் சட்டம்  இயற்ற வேண்டும்.

வாட் சமாதானத்திட்டத்தில் வணிகர்களை இணைக்க கால அவகாசம் வழங்க வேண்டும். இரவு நேரங்களில் வணிகம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உரிய அரசாணை பிறப்பித்திருந்தும், பல்வேறு இடங்களில் இரவு நேர டீ கடைகள், உண வகங்கள் போன்றவற்றில் காவல்துறை அதி காரிகளின் அத்துமீறல்கள் இருப்பது தெரிய வருகிறது. எனவே இரவுநேரக் கடை கள் சம்பந்தமாக காவல்துறைக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

சாலையோரக் கடைகளை ஒழுங்கு படுத்தி, அதற்கு மாத வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இதனால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். 8000 சதுர அடி உள்ள வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட பணி நிறைவு சான்று தேவையில்லை என அறிவிக்க வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நகராட்சி, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை வாடகை கட்டி டங்களில் இயங்கி வரும் சிறு,குறு சில்லரை வணிகர்களுக்கான வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும என அதில் கூறப்பட்டுள்ளது.