அசாமில் வெள்ளிக்கிழமையன்று காலை 10.05 மணிக்கு, 3.7 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெஸ்பூருக்கு மேற்கு 39 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட, இந்த நிலநடுக்கம் கவுகாத்தியின் சில பகுதிகளிலும், மாநிலத்தில் பிற நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. முன்ன தாக கடந்த மே 29 அன்றும் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.