கிருஷ்ணகிரி, அக்.23- மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் ஒன்றிய மாநாடு அக்.23 அன்று சீனி வாச ரெட்டி, ஆனந்தராஜ் ஆகி யோர் தலைமையில் நடை பெற்றது. மூத்த உறுப்பினர் அப்போஜி ரெட்டி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். திம்ம ரெட்டி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். ஆர்.கே.தேவராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் துவக்கி வைத்தார். செய லாளர் ராஜா ரெட்டி வேலை அறிக்கை,வரவு செலவு சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி நிறைவுரையாற்றினார். நாராயணசாமி நன்றி கூறினார். புதிய ஒன்றியக்குழு 11 உறுப்பினர்கள் கொண்ட ஓசூர் ஒன்றிய குழு செய லாளராக ஆர்.கே.தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார். ஓசூர் மாநகராட்சிக்குள் உள்ள ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வேண்டும். அழியும் நிலையில் உள்ள மத்திகிரி கால்நடை பண்ணையை பரா மரிக்க வேண்டும்,பலவன பள்ளி உட்பட பல இடிந்து விழும் நிலையில் அரசு தொகுப்பு வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.