திருவண்ணாமலை, மே 27-
திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் கடந்த 90 ஆண்டுகளாக ஏரி கால்வாய் மூலம் சுப்பிர மணி என்பவரின் குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு தங்கள் சொந்த நிலத்திற்கு செல்லக்கூடிய கால்வாயை பக்கத்து நிலத்துக்காரர் முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், மேலும் அதே நிலத்திற்கு செல்லக்கூடிய ஏரி கால்வாயையும் முற்றிலுமாக அழித்து விட்டதாகவும், மீசநல்லூர் கிராம நிர்வாக அலுவலர், வந்தவாசி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும், கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்ய முடியாமல் நிலம் தரிசாக கிடப்பதால் சுப்பிரமணி குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக, வந்த வாசியில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்த வாசி வட்டச் செயலாளர் அப்துல் காதர், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார், விவசாய சங்கத் தலைவர் என். ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, இடைக்குழு உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்ட னர்.