districts

img

பழமை வாய்ந்த உருது பள்ளியை சீரமைக்க சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை

ராணிப்பேட்டை, பிப். 13 - ஆற்காடு பகுதியில் நூற்றா ண்டை கடந்த இஸ்லாமி உருதுப் பள்ளியை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அ.ரபீக் அகமது தலைமையில் ஆற்காடு நகராட்சி ஆணையரிடம் திங்களன்று (பிப். 13) மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா பகுதி கலவை சாலையிலுள்ள இஸ்லாமிய உருது பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த பள்ளிக்கு அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்காததால் கட்டிடங்கள் பராமரிப்பின்றி  சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே, கூடு தலாக கட்டிடங்களை சீரமைத்து, புதிய வகுப்பறைகள் உரு வாக்க வேண்டும், சத்துணவு கூடம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி களை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டி ருந்தது. மாநிலக் குழு உறுப்பினர் அப்ஸல் அகமது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்காடு தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், சுரேஷ், டி.பாஷா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆற்காடு ஒன்றியச் செயலாளர் ஆர்.சம்பத் ஆகியோர் உடனி ருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். பின்னர் ராணிப்பேட்டை புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, சிறு பான்மை மக்களுக்கு தையல் இயந்திரம், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஏற்கனவே அளித்த மனுக்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விசா ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.