ராணிப்பேட்டை, மே 12 -
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ரபீக் அகமது (60) உடல்நலம் குறைவால் வியாழக்கிழமையன்று (மே.11) காலமானார்.
சிறுபான்மை மக்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வந்தார். குறிப்பாக, நலத்திட்ட உதவி களை பெற்று கொடுப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தினார். அவரது உடலுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப. சுந்தர்ராஜன், திருவள்ளூர் மாவட்டச் செய லாளர் கோபால், திருத்தணி மாவட்டச் செயலாளர் அப்ஸல் அகமது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏபிஎம். சீனிவாசன், சிஐடியு ராஜேந்திரன், மூத்த உறுப்பினர்கள் செல்வராஜ், துரைராஜ், சிறுபான்மை நலக்குழு நிர்வாகி அனீஸ், சம்பந்தம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.