செங்கல்பட்டு, டிச.21- செங்கல்பட்டில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில் 8 நாட்கள் நடைபெறும் செங்கை புத்தகத் திருவிழா துவங்கி யது. மாவட்டந்தோறும் நடை பெற்று வருகின்ற புத்தகத் திரு விழாக்களின் ஒரு பகுதியாக செங்கல் பட்டு புத்தகத் திருவிழா - 2022 ‘ செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்து டன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செங்கை பாரதியார் மன்றம் சார்பில் நடைபெறுகின்றது. ‘ இத்திருவிழா டிசம்பர் 28 முதல் ஜனவரி 4 வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை செங்கல்பட்டு , ஜி.எஸ்.டி சாலை. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகின்றது. 50 புத்தக அரங்குகள். 50 ஆயிரம் தலைப்புகளில் பல ஆயிரம் புத்தகங்கள், கலை அரங்கம். உணவ ரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றஉள்ளனர். இத்திரு விழாவின் துவக்க விழா புதன்னறு (டிசம்பர் 28) மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடை பெற்றது. குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழா வினை துவக்கிவைத்து பேசுகையில், நமது பார்வை, நமக்கு வெளி உல கத்தை காட்டலாம். ஆனால், அறிவு உலகத்தை புத்தகங்களின் வழியே தான் காண முடியும் என்றார்.
போட்டி நிறைந்த உலகத்தில் நம் திறமையை வளர்த்துக்கொண்டு நமக் கென தனி முத்திரையை பதிக்க வேண்டும் என்றால் புத்தகம் வாசிப் பது மிக முக்கியமானது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் உள்ளங்கையில் உள்ள செல்போனில் பல்லாயிரம் புத்தகங்கள் இருந்தா லும், ஒரு புத்தகத்தை வாங்கி, படித்து சேமித்து வைப்பது நமக்கு மட்டு மல்ல அது அடுத்த தலை முறைகளுக்கும் நாம் சேமித்து வைக்கும் அறிவுச்செல்வம் என்றும் அவர் குறிப்பிட்டார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பி னர் க.செல்வம், செங்கல்பட்டு சட்ட மன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூத னன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் மாநக ராட்சி மேயர் வசந்தகுமாரி கமல கண்ணன், துணை மேயர் காம ராஜ், செங்கல்பட்டு நகராட்சி நகர் மன்ற தலைவர் தேன்மொழி நரேந்தி ரன், மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் சண்முகம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி. கார்த்திக், செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா திட்ட இயக்குநர் க.செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.