districts

img

சிஏஏ மூலம் சிறுபான்மை மக்களை பாஜக வஞ்சிக்கிறது

சென்னை, மார்ச் 27- சிஏஏ மூலம் சிறுபான்மை மக்களை பாஜக  வஞ்சிக்கிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் வன்முறையை தூண்டி  மக்களை திசை திருப்ப பாஜக, அதிமுக முயற்சி செய்கிறது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். வட சென்னை மக்களவைத் தேர்தலில்  இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இதை யொட்டி சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் நெல் வயல் சாலையில் வேட்பா ளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் பகுதிச் செயலாளர் செ.தமிழ் வேந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகை யில், சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை ஒன்றிய அரசு வஞ்சிக்க பார்க்கிறது. இதில் சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல இந்துக்களும் பாதிக்கப் படுவார்கள் என்பதை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி ஒழிக்கப்படும். வடசென்னை மேம்பாட்டிற்காக முதலில் ரூ.1,000 கோடியும், அண்மையில் 4,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே 3ஆவது முனையம் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  எல்.சுந்தரராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் நா.உஷாராணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் கே.கோதர்ஷா, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பாண்டியன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் வி.உதயகுமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் மேயர் ஆர்.பிரியா, திமுக நிர்வாகி கள் பரிமளா சுரேஷ்பாபு, மா.ருத்ரமூர்த்தி, எம்.ஏ.டீக்கா, அபாய், எஸ்.புஷ்பராஜ், ஜி.கிருஷ்ணகுமார், சிபிஎம்  பகுதிச் செயலா ளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.