விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி, மக்களவை உறுப்பினர் து.ரவிக்குமார், மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா, சாராட்சியர் கட்டா ரவி தேஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.