ராணிப்பேட்டை,அக்.15– வடகிழக்கு பருவ மழையொட்டி ராணிப் பேட்டையில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி செவ்வாயன்று (அக். 15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மீட்பு பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 3100 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலு வலர் மரியம் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சி யர் முனைவர் ஜெ.யு. சந்திர கலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வரு வாய் அலுவலர் ந. சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.