districts

img

நரிக்குறவர் இன மக்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம்

விழுப்புரம் மாவட்டத்தில்,தொடர் மழை பெய்து வருவதையொட்டி மரக்காணம் வட்டம், மரக்காணம் திரௌபதி அம்மன் கோவில் அருகில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு அரிசி, பிரட் மற்றும் பால் பாக்கெட்டுகளை வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வழங்கினார்.  மாவட்ட ஆட்சியர் சி.பழனி, முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், முன்னாள் மக்களவை உறுப்பி னர் பொன்.கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன், வானூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உஷா பி.கே.டி.முரளி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன் உட்பட பலர் உடனிருந்தனர்.