சென்னை, மார்ச் 26 - அடிப்படை புரிதலின்றி பாஜக தலை வர் பேசுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக கூறி னார். இந்தியா கூட்டணி சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதற்கான தலைமை பணிமனையை திங்களன்று (மார்ச் 25) சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பேசியதாவது: சூரியவம்சம் படத்தில் தேவ யாணியை கலெக்டராக ஆக்கியது போல், மனைவி ராதிகாவை எம்.பி. ஆக்குவேன் என்று ஒரு கட்சி தலை வர் கூறுகிறார். தேவயாணி எந்த மாவட்டத்தில் கலெக்டராக உள்ளார் என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள். கோவையில் வெப்பநிலையை 1.5 டிகிரியிலிருந்து 2 டிகிரியாக திமுக அரசு உயர்த்தி விட்டதாக ஒரு கட்சித் (பாஜக) தலைவர் கூறுகிறார். அதற்கு சமூக ஆர்வலர் பூவுலகின் சுந்தர்ராஜன் பதி லளித்துள்ள பதிலில், “ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவி யல் அறிவு இருந்தால், ஐபிசிசி அறிக்கையை படியுங்கள், உலக சரா சரி வெப்பநிலை 1.45டிகிரி அதிகரித்து விட்டதாக ஐபிசிசி அறிவித்துள்ளது, ஆத்ம நிர்பர் பாரத் என்கிற பெயரில், மத்திய இந்தியாவில் உள்ள 1.75 லட்சம் ஹெக்டேர் காடுகளை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்த்த வர்களுக்கு வெப்ப உயர்வை பற்றி யெல்லாம் கவலை எதற்கு?” என்று கேட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பசுமை நிலப் பரப்பு 23.7 சதவீதம் உள்ளதை 25 விழுக்காடாக மாற்ற 10 வருடம் ஆகும். அதாவது 7.50 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் மரங்கள் நடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி 80 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் தெரியாமல் அவர் பேசு கிறார். தேர்தல் முடியும் வரை இது போன்ற கேலி கிண்டல் பேச்சுகளை கேட்க வேண்டி வரும். நமது மேடை அவற்றிற்கு அறிவார்ந்த பதில்களை தரும். நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, செய்த பணிகளால் வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை மக்கள் வரவேற்கின்றனர். அரசின் சாத னைகளை சொல்லி வாக்கு கேட்போம். வாக்குவித்தியாசத்தில் வரலாற்று சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் மு.மகேஷ்குமார், த.வேலு எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன், காங்கிரஸ் இமையா கக்கன், மதிமுக மாவட்டச் செயலா ளர் பா.சுப்பிரமணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, விசிக மாவட்டச் செயலாளர் இளையா உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலை வர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.