districts

img

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இனி மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும்: அமைச்சர்

சென்னை,ஏப்.17- குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனைத்து வசதி களுடன் கூடிய சிறப்பு  மாவட்டத் தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படு கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று(ஏப்.17) நடந்த கேள்வி நேரத்தின் போது, “குரோம்பேட்டை அரசு மருத்து வமனை பன்னோக்கு உயர் சிறப்பு  மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? என்று பல்லா வரம் தொகுதி திமுக உறுப்பினர் இ.கருணாநிதி எழுப்பினார். மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளிக் கையில், “குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 213 படுக்கை வசதி கொண்ட  மருத்துவமனையாக உள்ளது.  இங்கு விபத்து அறுவை சிகிச்சை, மகப்பேறு, டயாலிசிஸ், ரத்த வங்கி, ஆய்வக பரிசோதனை உள்ளிட்ட போதுமான கருவி களும் உள்ளன.  கடந்த ஆண்டு  மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக இதை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  400 படுக்கைகளுடன் 2 லட்சத்து  27 ஆயிரம் சதுர அடி பரப்பள வில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.110 கோடியில் மருத்துவமனை கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக இயங்கும்.  குரோம்பேட்டை மருத்துவம னையில் தாழ்வான பகுதிக்கு பக்கத்தில் உள்ள புதிய மைதா னத்தில் புதிய மருத்துவ மனை கட்டப்படுகிறது. இது அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக இயங்கும். அனகாபுத்தூர், திருநீர் மலை,  கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லா வரம், பொழிச்சலூர், பழைய  பல்லாவரம், ஜமீன் ராயப் பேட்டை பகுதிகளில் 10 மருத்துவ  கட்டிடங்கள் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.