சென்னை, ஜன.18- மாதவரம் - பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி யும் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் 2 எந்திரங்கள் மூலம் அயனா வரத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளது. அயனாவரத்தில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் 30 மீட்டர் ஆழத் தில் சுரங்கப்பாதை அமைக் கப்படுகிறது. இந்த இடங்கள் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையி லான நீளத்தின் ஒரு பகுதி யாகும். அங்கு மொத்தம் 7 துளையிடும் எந்திரங்கள் மூலம் 2 ஆண்டுகளில் 9 கி.மீ. தூரத்துக்கு இரட்டை சுரங்கப்பாதைகள் அமைக் கப்பட உள்ளன. இதுகுறித்து அதிகாரி கள் கூறியதாவது:- மாதவரம்-கெல்லீஸ் இடையே மணல் பகுதி, மென்மையான பாறை, கடி னமான பாறை ஆகியவை கலந்துள்ளன. அதற்கு ஏற்ப கட்டர்களுடன் கூடிய துளையிடும் எந்திரங்கள் வேகமான கட்டுமானத் திற்காக தேர்வு செய்யப்பட் டுள்ளன. இந்த எந்திரங்கள் மூலம் ஒரு நாளைக்கு 7 மீட்டர் முதல் 11 மீட்டர் வரை துளையிட முடியும். மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் சுரங்கப்பாதை அமைப்பது சவாலானது. 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைப்ப தால் துளையிடும் எந்திரத் தால் ஏற்படும் அதிர்வு காரண மாக பழமையான கட்டிடங் கள் சேதம் அடையலாம். எனவே அதன் கட்ட மைப்புகளை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள் ளோம். மாதவரம்-கெல்லீஸ் இடையே 207 குடியிருப்பு கள் மற்றும் வணிக கட்டிடங் கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மாதவரம் பால்பண்ணை, முராரி மருத்துவமனை, அயனா வரம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஆகிய ரயில் நிலையங்களில் உள் நுழைவு, வெளியேறும் கட்ட மைப்புகள் அமைக்கப் படும்” என்றனர்.