districts

img

மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்

மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், ஆட்டோ செயலியை அரசே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.25) தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் (தென்சென்னை) சார்பில் கே.கே.நகர் போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனிபா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் இ.உமாபதி,  ஏ.பக்கிரி, என்.பாபு, சி.வெள்ளக்கண்ணு, கே.கே.நகர் பகுதி செயலாளர் ஏ.முருகன் உள்ளிட்டோர் பேசினர்.