தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவருமான முனைவர் கோ.விஸ்வநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தமிழி இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வழங்கினார். பொருளாளர் வே.பதுமனார், செயலாளர் மு.சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.