சென்னை, ஏப்.15- தோழர் என்.சங்கரய்யாவின் சகோதரி மீனாட்சி அம்மாள் (91) குரோம்பேட்டையில் சனியன்று (ஏப்.15) அதிகாலையில் கால மானார். மறைந்த மீனாட்சி அம்மாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வரும், சுதந்திர போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யாவின் இளைய சகோதரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். நரசிம்மனின் மாமியாரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக் குழு அலு வலக முன்னாள் செயலாளராக பணியாற்றிய மோகன் (எ) கல்யாணசுந்தரத்தின் தாயும் ஆவார். அவரது உடலுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் குமார், மாவட்டக் குழு உறுப்பினர் தாமோதரன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், 28ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினர். அவரது இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று (ஏப்.16) காலை 9 மணியளவில் குரோம் பேட்டை பல்லவபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.