districts

சென்னை முக்கிய செய்திகள்

மருத்துவக் கல்லூரி  பெண் பயிற்சி மருத்துவர் தற்கொலை

காஞ்சிபுரம், செப். 2 - மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் மாடி யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர், காரைப் பேட்டை பகுதியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த  மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த  ஷெர்லின் (23) என்ற, 5ஆம் ஆண்டு மருத்து வம் பயின்று வந்த நிலையில், அவர் திடீரென ஞாயிறு இரவு மருத்துவமனையில் 5 வது மாடியின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனை, பதட்டத்துடன் எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென குதித்துவிட்டார். கால்கள் மற்றும் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த அவரை அதே  மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து பொன்னேரிக்கரை காவல் துறையினர் கூறுகையில், “மாணவி ஷெர்லின் ஏற்கெனவே தனிப்பட்ட சொந்த விவகாரத்தில் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு  இருந்ததாக தெரிகிறது. அதற்காக வேலூர்  சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக  அவர் தற்கொலை செய்து கொண்டிருக் கலாம். இருப்பினும் தற்கொலைக்கு வேறு  ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித் தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி, செப்.2- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்பு ணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பிர சாந்த்  செப்.2 அன்று கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த விழா, கிராமங் கள் மற்றும் நகராட்சிப் பகுதி களில் செப். 30 வரை தொட ர்ந்து நடைபெறுகிறது. இதில் அந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர்.இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் செல்வி,அங்கன்வாடி பணி யாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு பேர் பலி

கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வழுதலம்பட்டு கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜோன் தாஸ் (45 ). முத்து (60) இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்.இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடியில் இருந்து கருவாச்சி பாளையம் வழியாக வழுதலம்பட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பேருந்து   மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.