திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் திங்களன்று (ஜன.3) நடைபெற்றது. இதில் 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.