districts

img

மே தின எழுச்சி ஊர்வலம், கொடியேற்றம்!

உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் வட மாவட்டங் கள் முழுவதும் கொடி யேற்றத்துடன் எழுச்சியாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மூத்த தோழர் எம்.வீரபத்திரன் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி, செயற்குழு உறுப்பி னர் எஸ். ராமதாஸ், எம். பிரகலாதன் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் ஜவான் பவன் அருகிலுள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். சிஐடியு தலைவர்களும் திரளாக பங்கேற்றனர். பிறகு சிஐடியு, ஏ ஐ டி யூ சி சார்பில் மே தின பேரணி நடைபெற்றது. ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மே தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாநில தலைவருமான எஸ். வாலண்டினா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட கிளைகளில் மே-தினத்தையொட்டி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு சார்பில் செங்கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி மே- தினத்தை கொண்டாடி னர்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்ஆர்.மூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு சார்பிலும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி கொடியேற்றினார். வேலூர் வடக்கு தாலுகா குழு சார்பில் தோழர் சாவித்திரி நினைவு இல்லத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.  ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சங்கத் தலைவர் டி. வெங்கடேசன் தலைமை யில் மே தின விழா நடை பெற்றது. சங்கத்தின் செயலாளர் டி. மனோகரன், சிஐடியு மாவட்டச் செய லாளர் ஆ. தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடந்த மே தின ஊர்வவத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலூரில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்டத் தலைவர் டி. முரளி தலை மையில் நேஷனல் ரவுண்டா னாவிலிருந்து  ராஜா திரை யரங்கு வரை உழைக்கும் தொழிலாளர்க ளின் பேரணி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்டப் பொருளாளர் எம்.கோவிந்த ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எம்.பி.ராமச் சந்திரன், மாநகர தொழிற் சங்க அமைப்பாளர் ஏ.ஞான சேகரன் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொது செயலாளர் எஸ்.ராமன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.