districts

img

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து, கொலை செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பெ.திலீபன், சிஐடியு அமைப்பாளர் கேசவன்,  ரவி(பிஎஸ்என்எல்), விச தாலுகா செயலாளர் காமராஜ், வாலிபர் சங்க நிர்வாகிகள் விமல், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்.