தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஆகியோரின் நலனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஆணை எண். 2ஐ ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னை அண்னாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் தலைமை முன்பு திங்களன்று (ஏப். 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொறியாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.தனசேகர் (சம்மேளனம்), ஏ.சேக்கிழார் (இஎம்டிஐ), சம்பத்குமார் (பொறியாளர் சங்கம்), விஜயரங்கம் (அண்ணா தொழிற்சங்கம்), ஏ.சேவியர் (ஐஎன்டியுசி), சாமி (அம்பேத்கர் சங்கம்), சந்திரசேகர் (ஏஇஎஸ்யு), சாலமன் (என்.எல்.ஓ), அம்பிராஜன் (கார்டு பில்லிங் யூனியன்), பொன்னம்பலம் (இன்ஜினியரிங் யூனியன்), கே.செல்வராஜ் (ஜனதா), தி.ஜெய்சங்கர் (சி.ஐ.டி.யு) ஆகியோர் பேசினர்.