districts

img

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ராணுவத்தை சீர்குலைக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரக்குழு சார்பில் அண்ணா சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பிரதேசக்குழு உறுப்பினர் ஆர். சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ், சீனிவாசன், கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், ஏ.சங்கரன், ஆர்டி. முருகன், வட்டச் செயலாளர்கள் வி.கிருஷ்ணராஜ், எஸ்.கணபதி, கே.சிவக்குமார்,எம்.கே.முருகன், ஏ. சகாதேவன், ஆர்.கண்ணப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, வி.அர்ச்சுணன், கே.அம்பிகாபதி,கே.சுந்தரமூர்த்தி, ஆர்.தாண்டவராயன், எஸ்.பிரகாஷ்,கே.வீரமணி,ஏ.நாகராஜ், எஸ்.சித்ரா உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர்.