ஜன.19 தியாகிகள் தினத்தையொட்டி வேலூர் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் தியாகிகள் ஸ்தூபி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டி.முரளி தலைமை வகிக்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்தராஜ், மாநகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், தவிச மாவட்ட பொருளாளர் ஜி.நரசிம்மன், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன், சிறுபான்மை மக்கள் நலக்குழு கன்வீனர் ஏ.கதிர்அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.