சென்னை, மார்ச் 30- சென்னை கோயம்பேடு சந்தையை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோயம்பேடு சந்தையில் சுமார் 4,000 கடைகள் உள்ளன. இந்த சந்தையில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத் தப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக 11 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவை மூட பட்டுள்ளதாகவும், 2,000 கிலோ பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தகவல் தெரி வித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளில் இருந்து 6,84,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், கோயம்பேடு சந்தையில் மஞ்சள் பை பயன்பாட்டை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடை முறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப் பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதோடு, பிளாஸ்டிக் இல்லா சந்தைகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.