விபத்தை தவிர்த்து, சுற்றுச் சூழலை பாதுகாத்து பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவும் பாதுகாக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் வேலூர் மண்டலம் சிஐடியு சார்பில் மாரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. வேலூர் தடகள சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த ஓட்டம் பிள்ளையார் குப்பம் பொறியியல் கல்லூரி அருகில் இருந்து சத்துவாச்சாரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் வேலூர் அதெலடிக் பவுண்டேஷன் தலைவர் நிதிஷ்பாண்டியன், செயலாளர் வெங்கடேசன், போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க சிஐடியு பொது செயலாளர் ரவிச்சந்திரன், துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார். சிஐடியு மாநில செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.