districts

img

நாராயண குருவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

சென்னை, அக். 1 - நாராயண குருவிற்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாராயண குருவின் சிந்தனை அமைப்பின் சார்பில் ஞாயிறன்று (செப்.29) கேரள சமாஜத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை டவுட்டனில் உள்ள ஒரு தெருவிற்கு நாராயணகுருவின் பெயரை கருணாநிதி சூட்டினார். பெரியாருக்கு உறுதுணையாக இருந்தவர் நாராயண குரு. நாராயண குரு கோவில் கட்டிய போது  சிலை வைக்க எதிர்ப்பு எழுந்த நிலையில்,  நீதி, நேர்மை, தர்மம் என்ற வாசகத்தை பொறித்து வழிபட வைத்தார். நாராயண  குருவுக்கு மணிமண்டபம் கட்ட முறைப்படி கடிதம் கொடுத்தால் முதல்வரின் கவனத் திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பேராசிரியர் கருணானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.