districts

img

மங்களூரு சம்பவம்: கோவையில் வாங்கப்பட்ட சிம்கார்டு?

மங்களூரு, நவ.20- கர்நாடக மாநிலம் மங் களூருவில் ஆட்டோவில் மர்மப் பொருள் வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர். இதில் கர்நாடக போலீசார் தீவிர சோதனை நடத்தி, வெடிகுண்டை இயக்கு வதற்கான சில பொருட் களை கைப்பற்றி உள்ள னர்.  மேலும் அவர்களது செல்போனில் இருந்து சிம்  கார்டை கைப்பற்றி விசாரித்த தில், அந்த சிம்கார்டு கோயம்புத்தூர் மாவட்ட முகவரியில் வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அது குறித்து விசாரித்த போது, அது முகவரி போலி யானது என தெரியவந்தது. போலி ஆவணங்களை கொடுத்து அந்த நபர்கள் செல்போன் சிம் கார்டு வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.