districts

img

திருவண்ணாமலையில் மான்-முயல் வேட்டையாடிய வாலிபர் கைது

திருவண்ணாமலை ஜூன் 14- திருவண்ணாமலையை அடுத்த கொண்டம் கிராமப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை  வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர் . அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் சிக்கினார். அவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் செங்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) எம்பது தெரிய வந்தது. மேலும் அவர் திருவண்ணாமலையை அடுத்த பாடகம் கிராமத்தின் அருகே உள்ள துர்க்கை மலைப்பகுதியில் மான் மற்றும் காட்டு முயலை வேட்டையாடியதாக தெரிவித்தார். மேலும் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரிய கோணிப்பையை சோதனை செய்ததில் அதில் வேட்டையாடிய ஒரு புள்ளி மான் மற்றும் 2 காட்டு முயல் இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சஞ்சயை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

;