districts

img

மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது 3 பேர் பலி

சென்னை, ஜூன் 1- சென்னை, மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது மாயமான 2 மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது, மகன் ரமேஷ் (18). ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்த தோட்டா பவன் கல்யாண் (20). இவர் கள், இருவரும் கடந்த 2  நாட்களுக்கு முன்பு மாமல்ல புரம் வந்து கடலில் குளித்த னர். அப்போது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கினர். இந்நிலையில், கல்லூரி மாணவன் ரமே ஷின் உடல் திங்களன்று  பேரூர் குப்பத்திலும், செவ் வாயன்று மதியம் தோட்டா  பவன் கல்யாண் உடல்  சூளேரிக்காடு குப்பத்திலும் கரை ஒதுங்கியது. இருவரின், உடல்களை அடுத்தடுத்து  காவல்துறையினர் கைப் பற்றினர். இதேபோல், பைய னூர் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் பன்னீர்செல்வம் (15). திங்களன்று  பள்ளி தேர்வு  முடிந்த நிலையில் நண்பர் களுடன் மாமல்லபுரம் கடலில் குளித்துள்ளார். அப்பொழுது, ஆழமான பகுதிக்கு சென்றதால் மாயமானார். இந்நிலையில் செவ்வாயன்று மாலை பன்னீர்செல்வம் உடல் நெம்மேலி குப்பத்தில் கரை  ஒதுங்கியது. தகவலறிந்த, மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

;