சென்னை, ஜூலை 30 - பொதுக் கழிப்பிட பராமரிப்பு, சொத்து வரி வசூலிக்கும் பணிகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப் பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 30) மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. நேரமில்லா நேரத்தில் பேசிய சிபிஎம் உறுப்பினர் ஆர்.ஜெயராமன், “4, 41, 98, 123 ஆகிய வார்டுகளில் ராம்கே நிறுவனம் முறையாக குப்பைகளை அகற்றுவ தில்லை. ஸ்டீபன்சன் சாலை 2 வருட மாக மூடி கிடக்கிறது. 123வது வட்டம் நாகேஸ்வரா பார்க் உடற்பயிற்சி கூடத்தில் உடைந்துள்ள உபகரணங் களை மாற்றித்தர வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “குப்பை அள்ளு வதற்கு கூடுதல் ஊழியர்கள் தேவைப் படும் இடங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 104வது வார்டு உறுப்பினர் டி.வி.செம்மொழி பேசுகையில், “ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை வழங்காமல் வெறும் கையோடு அனுப்பும் நிலை உள்ளது. இதனை மாற்றி குறைந்தபட்சம் 50 விழுக்காடு தொகையாவது ஓய்வு பெறும் நாளன்று கொடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப் பிட்டார். அதற்கு பதிலளித்த மேயர், “இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
வார்டுக் குழு நிதி அதிகரிப்பு
“தனியார் மூலம் சொத்துவரி வசூலிப்பதை மன்றத்தின் ஆலோ சனை பெற்று செயல்படுத்த வேண்டும். சமூக நலக்கூடங்களுக்கு புதிய பாத்திரங்கள் வாங்க வேண்டும். ஆக்கிரமிப்பு என அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கடை வைப்பவர் கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று க.தனசேகரன் (வார்டு 137) வலியுறுத்தி னார்.
காகிதமில்லா மாநகராட்சி
61வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர் பாத்திமா அகமத் பேசும்போது, “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லேப்டாக், ஐபேட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று காகிதம் இல்லா மாமன்றம் அமைய உறுப்பினர்களுக்கு லேப்-டாப் அல்லது ஐ-பேட் வழங்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு அலுவலக பணியாளரை நியமிக்க வேண்டும், பொது கழிப்பிடங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீதுநட வடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த மேயர் “கவுன்சிலரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும். பொதுக்கழிப்பிடம் தொடர்பான புகார்கள் வருவதால், அனைத்து பொதுக்கழிப்பிடங்களையும் தனியாரிடம் கொடுக்க பரிசீலித்து வருகிறோம்” என்றார். ஆணையர் குறிப் பிடுகையில், மண்டலம் 5, 6 மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் பராமரிப்பு பணி தனியாருக்கு கொடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அவை தனியாருக்கு வழங்கப்படும் என்றார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
42வது வார்டு உறுப்பினர் ரேணுகா, 129வது வார்டு திமுக உறுப்பினர் மு.ராசா, 121-வது வார்டு திமுக உறுப்பினர் கி.மதிவாணன் உள்ளிட்டோர் பேசும் போது, “அதிகாரி கள் ஆய்வுக்கு வரும் போது உறுப்பினர் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரே பகுதியில் நீண்ட நாட்க ளாக இருக்கும் அதிகாரிகளை பணி மாறுதல் செய்ய வேண்டும்” என்ற னர். இதற்கு பதில் அளித்த மேயர், “திட்டப் பணிகள் குறித்த முழு விவரங்க ளும் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது அதிகாரி கள் உடன் செல்ல வேண்டும். கவுன் சிலர்களும், அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் மாநகராட்சி வளர்ச்சி அடையும். வார்டுக்குழு நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள் ளது” என்றார்.
உரிமை பத்திரம் இல்லாதவர்களுக்கும் வரி
172வது வார்டு உறுப்பினர் ஆர்.துரைராஜ் பேசுகையில், “நில உரிமை ஆவணம் இல்லாதவர்களுக்கு சொத்துவரி விதிக்க முடிவதில்லை. இதனால் மாநகராட்சிக்கு பெருத்த இழப்பு ஏற்படுகிறது” என்றார். அதற்கு பதிலளித்த ஆணையர், நீர்நிலை புறம்போக்கு அல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போரிடம் வரிவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வரி ரசீது கொண்டு அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என குறிப்பிட்டு வசூலிக்கப்படும்” என்றார்.