திருவள்ளூர், நவ.28- லஞ்சம், ஊழலும் இல்லாத துறையாக செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான, எல்ஐசியை அனைவரும் சேர்ந்து பாதுகாப்போம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்,கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறைகள் உரு வாக்கத்தின் சிற்பி ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு இன்சூரன்ஸ் ஊழியர்கள் முன்னெடுக்கும் பொதுத்துறை பாதுகாப்பு குறித்த திறந்தவெளி கருத்தரங்கம் பொன்னேரியில் புதனன்று (நவ.27), நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் 2 சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மதுக்கூர் ராம லிங்கம் பேசுகையில், எல்ஐசியின் இணையதளத்தை திறந்தாலே இந்தி எழுத்துருக்கள் தான் வரு கிறது. தமிழை, ஆங்கிலத்தை காணோம். உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி இருப்பது நியாயம். தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் நோக்கம் என்ன ? கண்டனங்கள் எழுந்தவுடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி வருகிறது என்று கூறி மீண்டும் ஆங்கிலம், தமிழுக்கு மாற்றப்பட்டது என்றார். தேசத்தை வாழவைக்கும் நிறுவனம் ஒரு விளக்கை இரண்டு கைகள் காத்து நிற்பது போல எல்ஐசி நிறுவனம் லோகோ அமைத்துள்ளது. எந்த புயல் வந்தாலும், இந்த விளக்கை இரண்டு கரங்கள் காப்பது போல, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் எல்ஐசி பாது காக்கும் என்கிற அடையாளம் தான் அது. இந்த விளக்கை காக்கும் கரங்களையும் சேர்த்து அகற்றிட ஒன்றிய அரசு முயன்ற போது, அதை பாதுகாத்து நின்ற கரங்கள் தான் ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்கள். எல்ஐசி-யில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்க ளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் எல்ஐசி-யில் பணியாற்றக் கூடிய உயர் பொறுப்பில் இருப்பவர் கூட தெருவில் நின்று எல்ஐசியை பாதுகாக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை மக்கள் மத்தியில் விநியோகம் செய்கிறார்கள் என்று சொன்னால், இந்த எல்ஐசி நிறுவனம் அந்த ஊழியர்களை மட்டுமல்ல, தேசத்தையே வாழ வைக்கிற ஒரு அமைப்பாகும். இந்த பொதுத்துறை நிறுவனத்தை சிதைக்க முயல்வதை நாங்கள் ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக போராடி வருவதை யும் சுட்டிக்காட்டினார். தனியார் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இலவசம் என அறி விக்கும். பின்னர் விலையை உயர்த்துவது வாடிக்கையாக வைத்துள்ளனர். ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதால்தான் இன்றைக்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்கி றோம். பிஎஸ்என்எல் நிறுவத்தை வைத்துதான் இன்றைக்கும் தனியார் நிறுவனங்கள் பிழைப்பு நடத்தி வருகிறது. எந்த தனியார் பேருந்து முதலாளியாவது இலவச கட்டணம் என்று அறிவிப்பார்களா, அரசு துறையாக இருந்தால் தான் சாதாரண மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டில் உள்ள அனைத்து துறை களிலும் லஞ்சம், ஊழல் மலிந்து கிடக்கிறது. ஆனால், இந்த எந்த கரையும் படியாத துறையாக உள்ள பொதுத்துறை நிறுவனம் எல்ஐசி. ஊழல்கரைபடியாத எல்ஐசி யை அனைவரும் சேர்ந்து பாதுகாப்போம் என்றும் மதுகூக்கூர் ராமலிங்கம் தெரிவித்தார். திறந்த வெளிக்கருத்தரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் 2 ன் துணைத் தலைவர் வி.ஜானகிராமன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், தலைவர் மனோகரன் வரவேற்றார். கோட்ட நிர்வாகிகள் எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.ரமேஷ்குமார், முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் எஸ்.ஏ.கலாம் ஆகியோரும் பங்கேற்றனர். நிறைவாக செயலாளர் ஆர்.சர்வமங்களா நன்றி கூறினார்.