137ஆவது மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம்-செங்குன்றம் பகுதிக் குழு சார்பில் சூரப்பட்டு பகுதியில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் பகுதி செயலாளர் வி.கமலநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீ.ஆனந்தன், ஆர்.ரவிக்குமார், பகுதி குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, தாமோதரன், கிளைச் செயலாளர் இளங்கோவன், ரமேஷ், வாசுதேவன், கண்ணன் (மோட்டார் வாகனம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.