சி.ஸ்ரீராமுலு
36 ஆண்டுகள் கழித்து அர்ஜெண்டினா அணி கால்பந்து உலகக் கோப்பை யை வென்றது. அந்த அணிக்கு எத்தனையோ கேப்டன் வந்திருக்கலாம், சென்றிருக்கலாம். ஆனாலும், மாரடோனாவே இன்றும் கொண் டாடப்படுகிறார். அவரது கனவு நிறைவேறி விட்டது என்றும் ஆர்ப்பரித்தனர். இதனை ஆச்சரியமுடன் பார்த்த பலரும் இப்படி கொண்டாடுவது ஏன் என்று கேட்கிறார்கள். தனது இடது கை தோள்பட்டையில் சேகு வாரா, வலது கையில் பிடல் காஸ்ட்ரோ உருத்தையும் பச்சை குத்தி வைத்திருந்த மார டோனா, கால்பந்து விளையாட்டை மட்டும் நேசிக்கவில்லை. மதங்களைத் தாண்டி, நாடு களைத் தாண்டி, மனிதர்களை நேசித்த ஒரு மாமனிதர். கால்பந்து களத்தில் மட்டும் அவர் சூப்பர் ஸ்டார் அல்ல. அரசியல் உலகிலும் நிறைய டான்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரின் அருகாமையில் இருந்த லுனூஸ் என்கிற சின்னஞ்சிறு குடிசைப் பகுதியில் பிறந்த டிகோ ஆர்மண்டோ மாரடோனாவின் வாழ்க்கையில் முதலில் ஏழ்மைதான் விளையாடியது. மாரடோனா தான் வீட்டுக்கு மூத்த மகன். இவருக்கு அடுத்து நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். மொத்தம் ஏழு பேர். அப்பா, அம்மாவுக்கு சரியான வேலைகள் கிடையாது. கெமிக்கல் ஆலையில் கூலி வேலை செய்தார் அப்பா. அதில் கிடைத்த வருமானம் சாப்பாட்டுக்கு போதவில்லை. வறுமை வாட்டியது.
“ஒவ்வொரு முறையும் எங்க வீட்ல சாப்பாடு கிடைக்கும் போது, வயிறு வலிக்குது என்று எங்க அம்மா சொல்லுவாங்க. ஆனால் அது உண்மையல்ல. எங்க எல்லோருக்கும் சோறு கிடைக்காது என்பதற்காக அப்படி ஒரு பொய்யை சொன்னாங்க” என்று மாரடோனா குடும்பத்தின் வறுமையை கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே கால்பந்து மீது தனி யாக காதல். இதை அறிந்த தந்தை வாங்கி கொடுத்த ஒரு கால்பந்து தான் மாரடோனா வாழ்க்கையில் திருப்புமுனை. அது அவரது குடும்பத்தையும் காப்பாற்றியது. ஒரு சிறந்த கால்பந்து வீரனையும் அடையாளம் கண்டது. ஒரு புரட்சியாளரை இந்த உலகத்துக்கு கொடுத்தது. இவை அனைத்தும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஆரம்பத்தில் டிவி ஷன்களில் போட்டி நடக்கும் இடங்களில் பந்து எடுத்து போடும் போது பந்தை வைத்து அவர் செய்து காட்டிய சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது. பிறகு, தனது 11ஆவது வயதில் முதன் முதலாக கால்பந்து உலகில் கால் பதித்தார். ஜூனியர் அணியில் தான் விளையாட ஆரம்பித்த அத்தனை அணிகளுக்காகவும் கோல் மழை பொழிய தேசிய அணிக்குள் நுழைந் தார். அப்போது அவருக்கு வயது 16. படிப்படியாக உச்சத்தை தொட்ட அவ ருக்கு கால்பந்து வீரர்களுக்கான உடல் அமைப்பு கிடையாது. ஒரு குடிசை பகுதி பையன் இவ்வளவு நல்லா விளையாடுவதா என்று பலரும் எரிச்சலாகவே பார்த்தனர். இயல் பாகவே குட்டையான உருவம் கொண்டவர் என்பதால் நிறத்தையும் உருவத்தையும் வைத்து கேலி, கிண்டல் செய்திருக்கிறார்கள். எதைப் பற்றியும் அவர் கவலைப்பட வில்லை. அவரது ஒரே குறிக்கோள் கோல் போடுவது மட்டுமே என்று கால்பந்து களத்தில் பதில் கொடுத்தார்.
என்றென்றும் மக்கள் மனதில்!
1982 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தடம் பதித்தாலும் 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகும். அந்த தொடரில் அணி யின் கேப்டனாக அர்ஜெண்டினா வீரர்களை வழிநடத்திச் சென்ற அவர், காலிறுதிப் போட்டி யில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்து தொடரிலிருந்து வெளியேற்றினார். இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி உலகக் கோப்பையை கையில் ஏந்திய மாரடோனாவை அர்ஜெண் டினா மட்டுமல்ல, ஏகாதிபத்திய நாடுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உலகம் முழுவதும் கொண்டாடினர். அன்று முதல் உலக கால்பந்து ரசிகர்கள் மனதில் மட்டு மல்ல மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். கால்பந்து உலகில் கொடிகட்டி பறந்ததால் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களும் கால் பந்து கிளப்புகளும் விளம்பரத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு அலை மோதின. பந்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருப்பது, தனது மாயாஜாலம், நுணுக் கங்கள், டிரிப்ளிங் என்று சொல்லப்படும் எதிரணி வீரருக்குப் போக்குக்காட்டி பந்தை லாவகமாக கடத்தும் விதம், மாரடோனாவின் தனித்துவம் அனைவரையும் கவர்ந்தது. தனது தனித்திறமைகளால் உலகமே கொண்டாடும் கால்பந்து மாவீரனாக எழுந்த மாரடோனா, கால்பந்து பிதாமகன் பீலேவுக்கு நிகராக அனைவராலும் போற்றப்படுகிறார்.
இடதுசாரி அரசியல்...
குடிசைப் பகுதியில் பிறந்தது முதல் பல பாகுபாடுகளை எதிர் கொண்டு உயர்ந்த இடத்தை பிடித்ததால் உலகம் முழுதும் உள்ள ஒடுக்கப்படுகிற மக்களின் குரலாகவும் ஒலித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது இடதுசாரி அரசியல். அர்ஜெண்டினா போன்ற காலனி நாடுகளில் மக்களையும் வீரர்களையும் வெள்ளை ஏகாதி பத்தியம் பறவைகள் மாதிரி சுட்டுக்கொன்றன. அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே நான் இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோல்கள் அடித்தேன்” என்று பகிங்கரமாக அறிவித்தார். சேகுவேராவை போல் கியூபாவை இன் னொரு தாய் நாடாக பாவித்த மாரடோனா, 1986ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பிறகு பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார். அதன் பிறகு அவரை தனது இரண்டாவது தந்தை என்றும் உலகுக்கு அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, லத்தின் அமெ ரிக்கா நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுத் தார். அமெரிக்காவின் அட்டூழியங்களை கடுமையாக எதிர்த்து வந்த வெனிசுலா அதிபர் சாவேஸின் நடவடிக்கைகளை ஆதரித்தார். ஜார்ஜ் புஷ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதி திட்டங்களை கடுமையாக சாடினார். ‘நான் சாவேஸ் ஆதரவாளன்’ என்று வெளிப்படையா கவே அறிவித்தார். இதன் மூலம் பொலிவியா ஜனாதி பதியும் நெருங்கிய நண்பராக மாறினார்.
கியூபாவின் மருத்துவ மகத்துவத்தின் தூதர்
இதனால் ஆத்திரமடைந்து வெறி கொண்ட அமெரிக்கா, மாரடோனாவை பழிவாங்க முடிவு செய்தது. அதற்காகவே கண்விழித்து காத்துக் கொண்டிருந்தது. 1994 ஆம் ஆண்டு அமெரிக் காவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் போதைப் பொருள் உட்கொண்டதாக ஆட்டத்தி லிருந்து வெளியேற்றியது. அநியாயமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட் டால் மனதளவில் பாதிப்படைந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த தகவலை அறிந்த பிடல் காஸ்ட்ரோ தனது நாட்டிற்கே அழைத்து வந்தார். நான்காண்டு காலம் சிகிச்சை முடிந்து மீண்டும் கால்பந்து களத்திற்கு அனுப்பி வைத்தார். அர்ஜெண்டினாவின் பாம்பனொரா ஸ்டேடியம் ரசிகர்களால் திமிறிக்கொண்டி ருந்தது. கூட்டத்தில் இருந்த பல ஆயிரம் பேர் சட்டை அணிந்திருக்கவில்லை. உடல் முழுக்க மாரடோனாவின் ஓவியங்கள், டாட்டூக்கள். மைதானம் முழுக்க ஒரேயொரு பெயர் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. “மாரடோனா... மார டோனா... டியாகோ’’ என்கிற ரசிகர்களின் கூச்சல் விண்ணை முட்டுகிறது. தொலைக்காட்சி வர்ணனையாளர்கள்கூட “கடவுள் வந்துவிட்டார்... எங்கள் தெய்வம் வந்து விட்டது” என உற்சாகமாகக் கூச்சலிடு கிறார்கள். வானத்திலிருந்து ராட்சத பலூன் ‘வெல்கம் பேக் மாரடோனா’ எனும் வாசகத் தோடு மைதானத்துக்குள் இறங்குகிறது. மக்கள் அலைகளின் நடுவே மாரடோனா களத்துக்குள் வருகிறார். மார்புக்கும், காலுக்கும் இடையில் கால்பந்தை வைத்துக் கொண்டு அவர் செய்யும் வித்தைகளைப் பார்த்து ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, கியூபாவின் மருத்துவ மகத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பினார்.
ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆக்ரோசம் 2004ஆம் ஆண்டில் இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு எதிராக நடந்த போராட்டத் தில் “ஜார்ஜ் புஷ் ஒரு கிரிமினல் வார்”என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்டுடன் கலந்து கொண்டார். அர்ஜெண்டினாவில் அமெரிக்க கொண்டு வந்த மக்கள் விரோத ஒப்பந்தத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் “ஸ்டாப் புஷ்” என்ற வாசகத்துடன் பங்கேற்றார். அந்த போராட்டத்தின் போது ஜார்ஜ் புஷ் ஒரு ‘மனிதக் குப்பை’ என்றும் அவர் எடுக்கும் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் முழுக்க முழுக்க எதிர்ப்பேன் என்றும் துணிச்சலாக அறிவித்தார். 2014ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் மீது குண்டுமழை பொழிந்து படுகொலைகள் நடத்தியது. இதை எதிர்த்தும் வெளிப்படையாகவே களத்தில் இறங்கினார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது, தனது வாரிசாக லியனல் மெஸ்ஸியை அறிவித்தார். அவரும் ஒடுக்கப் பட்ட மக்களின் பிரதிநிதியாகும். ஏழ்மையை வென்று தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி அர்ஜெண்டினா அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். சிலரின் கண்களுக்கு மாரடோனா சாத்தா னாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், கால் பந்தை நேசித்த அத்தனைப் பேருக்கும் அவர் தான் கடவுள். மாவீரர்களுக்கு மரணம் இல்லை. மாவீரர்கள் எப்போதும் மரிப்பதில்லை. வரலாற்றிலிருந்து மறைவதும் இல்லை!