districts

img

காலங்கள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் சென்னை அண்ணா மேம்பாலம்

சென்னை, ஜூலை 1-

    சென்னையின் அடை யாளங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா மேம்பா லம் சனிக்கிழமை (ஜூலை 1) தனது 51ஆவது ஆண்டில்  அடியெடுத்து வைக்கிறது.

   சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக் கும் வகையில், கடந்த 1971ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மேம்பால கட்டுமான பணிகள்  தொடங்கியது. இதை யடுத்து 21 மாதங்களில் கட்டி  முடிக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை அப்போ தைய முதலமைச்சர் கருணா நிதி ஜூலை 1ஆம் தேதி திறந்து வைத்தார்.

    இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் அண்ணா மேம்பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  அப்போது இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக விளங்கிய அண்ணா மேம்பாலத்தின் அருகே கடந்த 1976ஆம் ஆண்டு வரை ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. இதனால் ஜெமினி மேம்பாலம் என்றும் இந்த பாலம் அழைக்கப்படுகிறது. தற்போது தினசரி லட்சக் கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாகச்  செல்கின்றன.  

   இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 8.85  கோடி செலவில் அண்ணா மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடை பெற்று வருகிறது. செப்டம் பர் 15ஆம் தேதி பேரறி ஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று இந்த புதுப் பிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட் டுள்ளது.

    போக்குவரத்து நெரி சலை கருத்தில் கொண்டு,  இன்றைக்கு சென்னையில் எத்தனையோ மேம்பாலங் கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு திறக்கப் பட்டாலும், சென்னையின் பாரம்பரிய அடையாளமாக 51ஆவது ஆண்டில் அடியெ டுத்து வைத்து கம்பீரமாக காட்சியளிக்கிறது அண்ணா மேம்பாலம்.