சென்னை, டிச. 13- பெரிய மார்க்கெட்டின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் உரிமை யாளர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க கோரி வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் பெரிய கடை மற்றும் சிறு கடை வியா பாரிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (டிச. 13) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 150 ஆண்டுகளாக ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகள். பழங்கள், மளிகைப் பொருட்கள், இறைச்சிகளை விற்பனை செய்துவரும் பெரிய மார்க்கெட் வியாபாரிகளின் தொழிலுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கட்டிட உரிமையாளர் ஜோதிபாய் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நூற்றுக் கணக்கான வியாபாரிகளின் அடிப்படை தேவையான குடிநீர், தூய்மை பணியை நிறுத்தி அராஜகம் செய்து வரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வண்ணாரப் பேட்டை மார்க்கெட் வளாகம் விற்பனை குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கட்டிடத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன. சங்கத்தின் தலை வர் டி.வெங்கட் தலைமை தாங்கினார். சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ். கே.மகேந்திரன், சிஐ டியு மாவட்ட துணைச் செய லாளர் ஆர்கலோகநாதன், கே.செல்வானந்தன் (எம்.சி. ரோடு வியாபாரி கள் சங்கம்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் எம்.தமீம் சேட்டு (வள்ள லார் வியாபாரிகள் சங்கம்), கோபிநாத் (மூலக் கொத்தளம் வியாபாரிகள் சங்கம்), பி.செல்வம் (கட்டு மான சங்கம்), எஸ்.பாப்பூ (பீடி சங்கம்), வி.திரு நாவுக்கரசு (ஆட்டோ சங்கம்), எம்.அண்ணாமலை (சுமைப்பணி சங்கம்), பி.எம்.முனியாண்டி (அமைப்புசாரா சங்கம்) மற்றும் செயலாளர் பி.பூபதி, பொருளாளர் டி.கணேசன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.