districts

மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

புதுச்சேரி, மே 18-

   மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் கள்ளச் சாராயம் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுவை அருகே தமிழ்நாட்டின் பகுதியான ஆரோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட பூத்துறை காட்டு பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

   இதையடுத்து காவல் துறையினர் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சாராய விற்பனையை கண்காணித்து வந்த நிலையில், அப்போது வில்லியனூரில் இருந்து புதுவை சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை பிடித்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் அவர் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) என்பது தெரிய வந்தது. இதை யடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.