அம்பத்தூர், டிச. 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அம்பத்தூர் விசேஷக் கிளைச் செயலா ளர் என்.கணேசன் துணை வியார் கமலா (71) திங்க ளன்று (டிச. 19) காலமா னார். சோழபுரம் பெண்கள் கட்சிக் கிளையின் செயலா ளராக நீண்டகாலம் செயல் பட்ட இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை அம்பத்தூர் பகுதியில் வளர்ப்பதற்கு உறுதுணை யாக இருந்தார். அம்பத்தூர் நகராட்சி தேர்தலில் 17ஆவது வார்டில் தோழர் கமலா கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர். அப்பகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், ராணிப் பேட்டை மாவட்ட அமைப்பா ளர் என் காசிநாதன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், கார்த்தீஷ்குமார், அம்பத்தூர் பகுதி செயலா ளர் ஆர்.கோபி, ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.ஜான், மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணை பொதுச் செயலாளர் கே.ரவி ச்சந்திரன், சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணசாமி, பி.என்.உண்ணி, சு.பால்சாமி, டி.கே. சம்பத்ராவ், இ.பாக்கியம், ஜலந்தரய்யா, வர்கீஸ், ராபர்ட்ராஜ், பொன்னுசாமி, ஜி.மூர்த்தி, சீனிவாசன், வீரன், சந்திரன், ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் புதனன்று (டிச. 21) அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.