districts

img

தோழர் கே.ராமச்சந்திரன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

சென்னை, ஏப். 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டியூப் புரொடக்‌ஷன் ஆப் இந்தியா கிளைச் செய லாளர் தோழர் கே.ராமச்சந்திரன் சனிக் கிழமை (ஏப். 15)  காலமானார் அவருக்கு வயது 51. இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆவடி பகுதி தலைவராக வும், டியூப் புரொடக்‌ஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கட்சிக் கிளைச் செயலாள ராகவும் சிறப்பாக பணியாற்றியவர். தொழி லாளர்களுக்கு மட்டுமல்லாமல், தான் வசித்த குடியிருப்பு பகுதியிலும் மக்கள் பிரச்சனை களுக்காகவும் தனது இறுதிமூச்சு வரை தொடர்ந்து போராடியவர். அவரது உடலுக்கு கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ம.பூபாலன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஏ.ஜான், சு.லெனின்சுந்தர், ஆர்.கோபி, பகுதிக் குழு உறுப்பினர்கள் லதா,  நடராஜன், சரவணன், விஜயகுமார், ராபர்ட்ராஜ், ரகு (தமுஎகச), ஐசிஎப் யுனைட் டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், டிபிஐ தொழிற் சங்க தலைவர் பாலகுமார், செயலாளர் சர வணன், பொருளாளர் துரை உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட்டு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) மாலை 3 மணியளவில் ஆவடி காமராஜ புரத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப் பட்டது.