districts

img

தோழர் வேதகிரி குடும்பத்தினருக்கு தவிச-விதொச மாநில தலைவர்கள் ஆறுதல்

செங்கல்பட்டு, ஏப்.20-  கடந்த ஏப்ரல் 5ம் தேதியன்று  டெல்லி யில் விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் நடைபெற்ற   பேரணியில் பங்கெடுக்க சென்ற போது  மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன மூத்த தோழர் வேதகிரியின் இறுதி நிகழ்வில் டெல்லி பேரணியில் இருந்ததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்க இயலவில்லை.  இந்நிலையில் புதனன்று (ஏப்19) செங்கல்பட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு  சென்ற தவிச மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநில பொருளாளர் அ.பழனி சாமி, மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் தோழர் வேதகிரியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.  மேலும் தோழர் வேதகிரி படத்திற்கு மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். விதொச  மாவட்டத் தலைவர்  பி.சண்முகம், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  அரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன், மாநிலக்குழு உறுப்பினர்  சந்திரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.