districts

img

நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, மே 17-

    நீர் நிலைகளை தனி யாருக்கு தாரை வார்க்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  முத்துகடை பேருந்து நிறுத்தம் அருகே புதனன்று (மே 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   நீர்நிலைகளை நிர்மூல மாக்கி, விவசாயிகளின் வாழ்வை சூறையாடி ஒட்டு மொத்த சுற்றுச்சூழலையும் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம்  2023ஐ உடனே திரும்பப் பெற வேண்டும், முத்தரப்பு  கூட்டத்தை நடத்தி மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ரேஷன் கடைகளில், ஊட்டச்சத்து மையங்களில் அவசர கதி யில் செரிவூட்டப்பட்ட அரிசி  வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.

   மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், தாலுகா செயலாளர் ஆர்.மணி கண்டன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்சி.மணி, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன்,  துணை தலைவர்கள் என். ரமேஷ், எஸ்.செல்வம்,  அ.குமார், கே.ஏழுமலை,  நிலவு குப்புசாமி, என். கிரி, கே.சேகர்  ஆகியோர் பேசி னர்.